மே 9ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!

0
மே 9ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!
மே 9ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!
மே 9ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!

மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவுரங்காபாத் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு ஊரடங்கு அமல்:

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதை கைவிட்டு விட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா காரணமாக தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இந்த வகையில் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற பீதியில் பொதுமக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் உத்தரவு!

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கிற்கு காரணம் கொரோனா பரவல் இல்லை. மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த பிரச்சினைகள் எழுந்து வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் இன்று முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களில் இருந்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுவதற்கு ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது இது தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மே 9ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் ஒலிபெருக்கி தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பி வருவதுடன், அவர் மே 1ம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேரணியை தடுக்கும் விதமாக அவுரங்காபாத் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!