இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – பிரதமரின் அதிரடி முடிவு என்ன?
இந்தியாவில், தலைநகர் டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு ஊரடங்கு உத்தரவு அமல்:
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த, இன்று வரை உலக சுகாதாரத்துறை திணறி வருகிறது. இருப்பினும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகிறது. ஆனாலும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் கொரோனா உருமாற்றம் அடைந்து மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாகத் தான் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால் அமலில் இருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர்.
மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல், நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – அரசின் அதிரடி உத்தரவு!
இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் நோய் பரவல் உச்சம் தொடுவதால் கடந்த 1ம் தேதி முதல் ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதை அடுத்து இந்தியாவிலும் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மீண்டும் அமல்படுத்தி வருகின்றனர். இதை அடுத்து டெல்லி, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையில், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,377 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன் தினம் 2,927 ஆகவும், நேற்று 3,303 ஆகவும் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3,377 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,30,622 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 லிருந்து 17,801 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகவில்லை.