நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் விளக்கம்!
உலகளவில் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பிரதமர் உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பூசி கட்டாயம்:
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா என்ற அரக்கன் ஆட்சி செய்து வருகிறது. பல வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீண்டு வர ஊரடங்கு கட்டுப்பாடுகளே ஒரு தீர்வாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்தில், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக, கடந்த 10 நாட்களுக்கும் மேல் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல்? அரசு திடீர் விளக்கம்! புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
அந்த நாட்டின் தலைநகர் வெலிங்டன் உட்பட பல இடங்களில், வாகனங்களை சாலைகளில் நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் காவல்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வெலிங்கடனில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை களைந்து போக சொல்லி காவல்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
ஆனால் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் நியூசிலாந்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.