மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு தீவிர நடவடிக்கை!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா 5ம் அலையின் புதிய பாதிப்புகள் மீண்டுமாக உச்சம் தொடத் துவங்கியுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் பேரலைத்தொற்று இதுவரைக்கும் பல்வேறு உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த உயிர்கொல்லி நோய் பல வகைகளில் உருமாறி இப்போது புதிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில் சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் மீண்டுமாக முழு ஊரடங்கு எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் 4ம் அலை தோன்றி ஓய்ந்ததற்கு பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்போது 5ம் அலை உருவாகி இருப்பதாக தென் ஆப்பிரிக்க சுகாராத் துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்துள்ளார்
தமிழக அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – போராட்டம் அறிவிப்பு!
அதாவது, தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், உருமாறிய கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
என்றாலும் இப்போதுள்ள புதிய பாதிப்புகள் கொரோனா 5ம் அலைக்கான ஆரம்பம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள தென் ஆப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இப்போது தென் ஆப்பிரிக்கா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, நாடு முழுவதும் ஒரு நாளைக்கு பதிவு செய்யப்படும் புதிய பாதிப்புகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.