தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் 10 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வார இறுதி தினமான ஞாயிற்றுகிழமை அன்று மக்கள் கூட்டத்தை தவிர்க்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் ரூ.58 ஆயிரம் மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.21ம் தேதி கடைசி நாள்!
அன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் விரைவில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்தால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்றும் தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஊரடங்கினால் அதற்கு முன்தினம் சனிக்கிழமை, அதனை தொடர்ந்து திங்கள் கிழமைகளில் பண்டிகைக்கு பொருட்கள் வாங்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உருவாகும். பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாட வரும் இரண்டு ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஊரடங்கை ரத்து செய்வதற்கு தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.