தமிழகத்தில் முழு ஊரடங்கில் வழக்கம் போல ஆட்டோக்கள் இயங்கும் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கில் வழக்கம் போல ஆட்டோக்கள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் வழக்கம் போல ஆட்டோக்கள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் வழக்கம் போல ஆட்டோக்கள் இயங்கும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது முழு ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட சேவைகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோக்கள் இயங்கும்:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு 6ம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடந்த 9ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்த உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நேரத்தில் தேவை இல்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – முழு விபரங்கள் இதோ!

அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி – நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் உள்ளிட்டவை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் போன்ற சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். ஆனால் அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடந்த 2 வாரமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை மறுநாளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!

இதையடுத்து முழு ஊரடங்கு காலத்தில் அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அத்துடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் அடையாள அட்டையை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் பயணிகள் அனைவரும் ஆட்டோக்கள், வாடகை கார்களில் செயலி வழியாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வழக்கம்போல் ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!