தமிழகத்தில் டிச.31க்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த வகையான ஓமைக்ரான் வகை பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனைக்கு பின்னர் வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் 2ம் அலை துவங்கியது. இதன் பாதிப்புகள் ஏப்ரல் மாத இறுதி முதல் தீவிரமடைந்ததால் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. முன்னதாக அரசு அளித்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்தது. அதன் பிறகு அரசு தீவிர கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதன் விளைவினால் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா பரவல் பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகளை அளித்தது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் இறுதியில் பொதுத்தேர்வு!
தற்போது இறுதியாக டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்தா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், ‘டேட்டா செல்’ என்ற புதிய பிரிவை துவக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓமியோபதி, சித்தா, யுனானி போன்ற மருத்துவ முறைகளில் கொரோனா முதல் மற்றும் 2ம் அலைகளின் போது சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேபோல் தற்போது பரவிவரும் ஓமைக்ரான் வகை தொற்றிற்கும் இந்த முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இந்திய மருத்துவ முறைக்கான கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1700 படுக்கைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 6700 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் வகை தொற்றினை உறுதி செய்வதற்கான பரிசோதனை மையம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு மிகவும் தாமதம் ஆகிறது.
BCCI தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்படும். ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி பற்றி மத்திய அரசு அறிவித்த பின் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனைக்கு பின்னர் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதிக ஓமைக்ரான் வகை தொற்று தமிழகத்தில் பரவி வரும் நிலையில் இரவு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.