தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், நான்காவது அலையைக் கட்டுப்படுத்த, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதல்வர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிரடி விளக்கம்:
தமிழகம் உட்பட நாடு முழுவதும், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து வரும் வேளையில், உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீனா மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் கடைபிடித்து வருகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், இன்று முதல் பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என, அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதே போல், டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியாவில், கொரோனா நான்காவது அலை ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்த தகவலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழக அரசு கொரோனா தொற்றின் நான்காவது அலையைக் கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா பரவல் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, ஊரடங்கு கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் கூறியது, தற்போதைக்கு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தகவல் தெரிவித்து உள்ளனர்.