மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படும் பொருளாதாரம்! அச்சத்தில் தொழிலாளர்கள்!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கினால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த மாத துவக்கத்தில் இருந்து நிலவி வரும் கொரோனா 3ம் அலைத் தொற்று பரவல் காரணமாக ஜனவரி 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனுடன் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உணவகங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. இதனுடன் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
இதற்கிடையில் கொரோனா நோய் பரவல் குறைந்து வந்ததையடுத்து, பிப்ரவரி 1 முதல் அனைத்து விதமான கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளையும் நீக்கி அரசு உத்தரவிட்டது. அதன் படி, பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் ஆகியவை வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு DA, DR உயர்வு – கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் கேரளா மாநில எல்லையான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக அப்பகுதியில் இருந்தும் கன்னியாகுமரிக்கு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. இதனால் தொழில் நிமித்தமாக கேரளாவுக்கு சென்று வரும் கன்னியாகுமரியை சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் அன்றாட தொழில் முடக்கப்பட்டு விடுமோ என்று தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவி உள்ளது குறிப்பிடத்தக்கது.