இந்தியாவில் 2020ஐ போல் 2022ம் ஆண்டிலும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம்! மத்திய அரசு தகவல்!

1
இந்தியாவில் 2020ஐ போல் 2022ம் ஆண்டிலும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம்! மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 2020ஐ போல் 2022ம் ஆண்டிலும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம்! மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 2020ஐ போல் 2022ம் ஆண்டிலும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம்! மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்று தீவிரமானால் விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று முதன் முதலில் சீனாவில் வூஹான் நகரில் உருவானது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இத்தகைய தொற்று பரவல் காரணமாக சுமார் 7 மாதங்கள் முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. இத்தகைய ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்திலும் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. அவ்வாறு உருவான 2வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் இரவு ஊரடங்கு? இன்று வெளியாகும் அறிவிப்பு!

அதன்பின் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு – டிச.31 கடைசி நாள்!

இதுவரை இந்தியாவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கினை விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை ஒமைக்ரான் பரவல் விஸ்வரூபமெடுத்தால் மீண்டும் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!