இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு ஆலோசனை! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பட்சத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ்
பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் இதுவரை 33 பேரை தாக்கி இருக்கும் நிலையில், நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலாம் அலை பாதிப்பின் போது கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – டிசம்பர் 15 விண்ணப்பிக்க கடைசி நாள்!
அதே போல 2ம் பேரலையின் போது ஒவ்வொரு மாநில அரசுகளும், நோய் தொற்று நடவடிக்கைகளை அமல்படுத்திய நிலையில் இத்தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த சூழலில் தான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்று இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் தடம் பதித்துள்ளது. அந்த வகையில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 33 பேருக்கு இந்த தொற்று உறுதியாகி இருக்கிறது.
இதையடுத்து இந்த நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வர மக்கள் மத்தியில் மீண்டுமாக நிம்மதியற்ற சூழல் உருவாகி இருக்கிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கொரோனா டெல்டா வகை வைரஸை விட அதி தீவிரமாக பரவக்கூடியதாகவும், அதிக வீரியம் மிக்கதாகவும் கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது சமூக பரவலாக மாறினால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
திருப்பதி தரிசனம் செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!
அதனால் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இம்முறை ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.