இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!

0
இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று 2 பேருக்கு உறுதியாகி இருக்கும் நிலையில், மீண்டுமாக நாடு தழுவிய முழு முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முழு ஊரடங்கு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதன் விளைவுகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது வரை சுமார் 29 உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று சுமார் 373 பேருக்கு உறுதியாகி உள்ளது. இந்தியாவிலும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முழு நாடும் தற்போது இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

இதனால் இந்தியாவில் மீண்டுமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்த கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு, ‘இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று உறுதியான நபர்களுடன் நேரடியாகவும், அடுத்த கட்டமாகவும் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

உலக நாடுகளை சேர்ந்த சுமார் 373 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி இருக்கிறது. இது குறித்த கூடுதல் கண்காணிப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என விளக்கம் கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழ்நிலை தற்சமயம் உருவாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் தொற்றால் உருவாகும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!

ஆனால் பொது மக்கள் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும். தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இப்போது ஒமிக்ரான் வைரஸ் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!