மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? அரசின் முடிவு என்ன!
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டு இறுதி இருந்து கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் தீவிரம் எடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. சீன அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் வர தொடங்கியது. இதனையடுத்து அரசு அறிவித்த தளர்வுகளால் மக்கள் இயல்பு நிலையை நோக்கில் திரும்பி வந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
RRB வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.65 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!
இதில் 39 பேர் வேற்று நாட்டவர்கள் என்றும் 28 பேர் சீன நாட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிலருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.