பிப்.21 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் விளக்க அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் அதிகரிகரித்தால் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். மேலும் இரண்டு டோஸ் கொரோனா செலுத்தியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள்:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டி படைத்து வருகிறது. கடந்த வருடம் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை மென்மேலும் அதிகப்படுத்தியது. உலக நாடுகள் செய்வதறியாமல் திகைத்தது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி பிற காரணங்களுக்காக வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தடுப்பு பணியின் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இரண்டு டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன்பாட்டால் நோய் பாதிப்பு விகிதம் சற்று குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கியது. தடுப்பூசிகள் மக்கள் செலுத்தியிருப்பதால் பெரிதாக பாதிப்புகள் இல்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சில கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 861 காலிப்பணியிடங்களுக்கான UPSC தேர்வு – பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால் ஊரடங்கில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.