தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நான்காம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருகிறது. முதல், இரண்டாம், மூன்றாம் அலை என முடிவடைந்துள்ள நிலையில், நான்காம் அலை தாக்கம் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அதனால் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – புதிய நிபந்தனைகள் வெளியீடு!
அதனால் தமிழகத்திலும் நான்காவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. நான்காவது அலை வரும் ஜூன் மாதத்தில் தாக்கக் கூடும் என்பதால், தற்போதே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் பின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும், மக்கள் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம் என தெரிகிறது.