மே 17 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – வெறிச்சோடிய சாலைகள்!!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தவிர 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தற்காலிக பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு காஷ்மீரில் ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 5000 வரை பதிவு செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைகளுக்கான “வார் ரூம்” – சிறப்பு அதிகாரிகள் நியமனம்!!
தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி அத்தியாவசிய சேவைகள் தவிர பிறவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 25 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர 26 மாவட்டங்களில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் நகர்ப்புற பகுதிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி துவங்கி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள பொது முடக்கம் மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் தெருக்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.