மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 19 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் முடிவு!
சமோவாவில் நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீன மாநிலம் உகான் நகரத்தில் இருந்து கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தீவிரம் எடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு வேகமாக பரவத் தொடங்கி உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்தியுள்ளது. நோய் தடுப்பு பணியாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரசானது உருமாற்றம் அடைந்து அடுத்த நிலைகளை அடைந்தது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 8ம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு!
இந்த வீரியம் மிகுந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் மேன்மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தியது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. அதனால் பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தலை தூக்க தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து சமோசாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ,மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.