நாடு முழுவதும் இன்று (ஏப்.11) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் திடீர் உத்தரவு!

0
நாடு முழுவதும் இன்று (ஏப்.11) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் இன்று (ஏப்.11) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் இன்று (ஏப்.11) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் திடீர் உத்தரவு!

சமோவாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில்(11 ஆம் தேதி) இன்று முதல் மே மாதம் 8 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

திடீர் உத்தரவு:

உலகத்தையே பெரும் அவதிக்கு உள்ளாகிய கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு சீனாவில் முதல் முதலில் பரவத் தொடங்கியது. அனைத்து நாடுகளிலும் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், சீனாவில் தாக்கம் குறைவாக இருந்தது. இருப்பினும் தற்போது சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு, அதன் பலனாக தற்போது கொரோனா தொற்று பரவல் அனைத்து நாடுகளிலும் குறைந்து வருகிறது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் தீவு நாடான சமோவாவில் இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிக அதிர்ச்சியில் உள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக, மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்த, அமலில் உள்ள முழு ஊரடங்கு, கடந்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சமோவாவில் நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தொற்று காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இன்று( 11 ஆம் தேதி ) முதல் மே மாதம் 8 ஆம் தேதி வரை கோவிட்-19 அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா அறிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனத்துடன், கொரோனா கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!