டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

0
டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் - அரசு உத்தரவு!
டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் - அரசு உத்தரவு!
டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

தற்போதுள்ள கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக வருகின்ற டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஜனவரி 20ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்து பெர்முடா அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு ஊரடங்கு

உலக நாடுகள் தோறும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெர்முடா அரசாங்கமும் டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஜனவரி 20ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட விலக்குகளை சரிபார்க்கவும், நிலையான அபராத அறிவிப்புகளை வெளியிடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு தினங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் ஸ்காட் உத்தரவின் படி டிசம்பர் 24 அதிகாலை 12.30 மணி முதல் 20 ஜனவரி 2022 வரை தினமும் இரவு 12.30 முதல் 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்’ என்று தெளிவுபடுத்தினார். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசரகால சேவைகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளதை தவிர, தினசரி நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த நேரங்களில் யாரும் தங்களது வீடுகள் அல்லது தங்குமிடத்தை விட்டு வெளியே இருக்கக்கூடாது என்றும் பெற்றோருடன் இல்லாத மைனர் குழந்தைகள் நைட் சாட்டில் இரவை கழிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ வணிகத்தின் போது, வேலை செய்யும் நபர்கள் எல்லா நேரங்களிலும் அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தேவை ஏற்பட்டால் அவற்றை அமலாக்க அதிகாரியிடம் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பௌலிங்கை சமாளிக்குமா தென் ஆப்பிரிக்கா? டெஸ்ட் தொடர்! ரசிகர்கள் உற்சாகம்!

ஒரு பார் அல்லது கிளப்பின் உரிமையாளர் முறையான நோய் தடுப்பு நடவடிக்கையுடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் இந்த பார் அல்லது கிளப்பில் எந்த நேரத்திலும் 10 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. மேஜைகள் குறைந்தது ஆறு அடி இடைவெளியில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஊரடங்குச் சட்டத்தின் போது விமான நிலையத்திற்கு சென்று வர உரிமம் பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!