அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? முழு விவரம் இதோ!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவின் ஷாங்காய் நகரில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவு செய்துள்ள நிர்வாகம், இந்த திட்டத்தில் நகரத்தை மூன்று வகைகளாகப் பிரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா புதிய பாதிப்புகள் பெருகி வந்த சூழலில் அந்நகரத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலங்களில் பொது மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் கடுமையான சிக்கல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக ஷாங்காய் நிதி மையத்தில் உள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பிற தேவைகள் இல்லாமல் தவிப்பதாகவும், பலர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
இப்போது சுமார் 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அறிகுறிகளை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கைகள் அளித்த தகவலின் படி, ஷாங்காய் நரம் 3 வகையாக பிரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு 7,600க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் 2,600 நகரங்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அதே போல 7,600 நகரங்கள் அடுத்த 2 வாரத்திற்குள் திறக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவின் ஷாங்காய் நகர், கடந்த ஒரு நாளில் 25 ஆயிரம் புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இப்போது இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகிறது. இதற்கு முன்னதாக சீனாவில் ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.