மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு? உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு பொது முடக்கத்தினை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சில மாநிலங்களில் மினி ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படியாக இருந்தும், தொடர்ந்து கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? ட்விட்டரில் கோரிக்கை!
இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொது முடக்கத்தினை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலமாக, தொடர்ந்து பரவி வரும் கொரோனா சங்கிலியினை கட்டுப்படுத்த முடியும். அதே போல் மக்கள் வார இறுதி ஊரடங்கினை சரி வர பின்பற்றவில்லை. கொரோனாவின் இந்த இரண்டாவது அலை சிறுவயதினர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோரை தான் அதிகமாக பாதிக்கின்றது. இதனால் முழு ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.