5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் தூதூர் கிராமத்தில் கொரோனா பரவல் காரணமாக ஐந்து நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
5 நாள் ஊரடங்கு :
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வருகிறது. அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை 35,000க்கும் அதிகமாக உள்ளது.
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
தற்போது பரவி வரும் இரண்டாம் கொரோனா அலை கிராமங்கள் தோறும் விரைவாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாவட்டங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு மையங்களை அமைத்துள்ளது. அதிகம் பாதித்த பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து வருகிறது. சில மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
TN Job “FB Group” Join Now
தற்போது நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள தூதூர்மட்டம் என்ற கிராமத்தில் மொத்தம் 53 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஐந்து நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி தூதூர்மட்டம் கிராமத்தில் இருந்து மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது. மேலும் வெளியாட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.