நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமரின் முடிவு என்ன?
ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில், குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு அமல்:
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை கொரோனா எனும் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றங்கள் அடைந்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் ஆல்பா, பீட்டா, காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான்,டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை அறிவிப்பு!
சீனாவில் கொரோனா இல்லாத நாடு என்ற கொள்கை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டு வருகிறது. சீனாவை தொடர்ந்து ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஷாங்காய் நகரில் நோய் பரவல் உச்சம் தொடுவதால் அமலில் உள்ள ஊரடங்கை, வரும் 26 ஆம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது, வரவிருக்கும் குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் வரை குளிர் காலம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தாக்கம் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.வரும் குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமக்கு ஏற்ப முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும்.