தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 4ம் அலை ஆரம்ப கட்டம்! எச்சரிக்கும் நிபுணர்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தொற்று பாதிப்பு குறித்து நிபுணர் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் அனைத்து வகையான தொழிற்துறைகளும் வணிக துறைகளும் இயல்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.78000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு எக்ஸ்இ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளன. அதனால் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும் கொரோனா பரிசோதனை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாக விடுதியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி இங்கு கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் கொரோனாவின் லேசான அறிகுறியுடன் உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் இது கொரோனாவின் 4ம் அலையின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.