தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைக்கு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் சூழ்நிலையும் அமையவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு போன்ற ஊரடங்கு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் கட்டாயம் அனைத்து பொதுமக்களும் போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு சூப்பர் அறிவிப்பு!

பெரும்பாலான பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பரவல் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக கடந்த வாரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அதாவது தமிழகத்தில் மட்டுமே 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அறவே இல்லை. 9 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

அதிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே இருக்கிறது. மேலும் இதுவரை 1.48 கோடி மக்கள் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு அலட்சியம் காட்டாமல் உடனடியாக இரண்டாவது தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். மேலும், தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநிலங்களில் தான் தடுப்பூசி செலுத்தும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டும் படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆயிரத்தில் மூன்று பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியிருக்கிறது. இதனால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைக்கு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!