தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திடீர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திடீர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் அனைத்து வகையான தொழில் மற்றும் வணிக துறைகளும் இயல்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் தடம் பாதித்துள்ளது. அதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனியார் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 200-ஐ தொட உள்ளது. அதனால் கொரோனா மேலும் பரவாமல் இருக்க பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. மேலும் செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா மேலும் பரவல் இருக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவை மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த தற்போது வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!