ஓமைக்ரான் பரவலை தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தீவிரமடையும் கட்டுப்பாடுகள்!
தற்போது புதுச்சேரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மேலும் ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளது.
ஓமைக்ரான் பரவல்
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு சராசரியாக 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதனால் அம்மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பொது இடங்களுக்கு வருவோர் மற்றும் வணிக வளாகங்களில் பணியாற்றும் அனைவரும் கட்டாயமான முறையில் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு 2022 எழுத திட்டமிட்டு உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள் இதோ!
மேலும் வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனவா என்று ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி போட மறுத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்திவீதியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஓமைக்ரான் பரவல் காரணமாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவர் ரவிவர்மன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அனைத்து கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், மதுபான கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!
அதோடு அதில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். இவ்வாறு ஓமைக்ரான் பரவல் காரணமாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்று பொது மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தகவல்கள் அம்மாநில அரசால் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.