TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – எப்படி தயாராவது? முழு விவரம்!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த குறைந்த கால இடைவெளியில் குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
TNPSC Group 4 VAO தேர்வு:
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, TNPSC குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை வழங்கப்பட்டது. அறிவிப்பின்படி, இந்த தேர்வுக்கு மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடத்தப்படவில்லை இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு தயாராவது எப்படி :
- குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் தேர்வில் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும்.
- தேர்வில் வினாக்கள் கேட்கப்படுவதைப் பொறுத்தவரை, பொது அறிவு பகுதியில், அறிவியல், அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது.
Exams Daily Mobile App Download
- அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்ய வேண்டும்.
- புவியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- தமிழ் மொழிப் பாடப் பகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
- இந்த தேர்வில் மொழிப்பாடங்களே நமக்கு எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். நாம் பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே இப்பகுதியில் 90 முதல் 95 மதிப்பெண்கள் பெறலாம்.