TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? முழு விவரம்!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி எப்போது? முழு விவரம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி எப்போது? முழு விவரம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? முழு விவரம்!

மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இந்த அறிக்கையின் அடிப்படையில், நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுவை விரைவில் நடத்த TRB முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு தேதி:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். மேலும் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் TRB யால் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 9000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தகுதி தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்த தகுதி தேர்வில் தேர்வு எழுதுவதற்காக 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், டெட் தேர்வு குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 28% ஆக உயர்வு – முதல்வர் அதிரடி உத்தரவு!

மேலும் இதுவரை எழுத்துத்தேர்வாக நடைபெற்ற நிலையில், இந்த முறை கணினி வழி முறையில் தேர்வு நடத்தவும் ஆலோசித்து வருவதாகவும், அனைவருக்கும் கணினி வழியில் முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருவதாகவும், அதேபோன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு என பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவிப்பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!