தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வரின் அறிவிப்பின் முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதையொட்டி நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்து மக்கள் சற்று அச்சமின்றி பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது கொரோனா பரவல் அதிகரித்தபடி இருந்தது. ஆனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
TCS நிறுவனத்தில் 210,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – 44,000 தற்காலிக பணியாளர்கள்! முழு விபரம் இதோ!
கொரோனா நான்காம் அலை தொடங்கி விட்டது என்கிற அச்சத்தில் நேற்று தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனையில் படுக்கை அறைகளை தயார் நிலையில் வைக்கும்படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download
மக்கள் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்தி இருக்க வேண்டுமெனவும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் கூட அந்த பகுதியை சுற்றியுள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றால் கண்டிப்பாக ஊரடங்கு அமலுக்கு வரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.