SBI vs PNB vs HDFC vs ICICI வங்கிகளின் பணம் எடுக்கும் வரைமுறை – முழு விவரங்கள்!
நாடு முழுவதும் உள்ள முக்கிய வங்கிகளின் தினசரி பணம் எடுக்கும் வரைமுறை மாறுபட்டுள்ளது. இதனை பற்றிய விவரங்களை பதிவில் காண்போம்.
பணம் எடுக்கும் வரைமுறை:
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றங்களை கொண்டுவருவதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வங்கிகளும் தங்களது வங்கியின் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. வங்கிகள் பரிமாற்றக் கட்டணத்தை ₹ 15 ல் இருந்து ₹ 17 ஆக அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, இந்த கட்டணம் ₹ 5 ல் இருந்து ₹ 6 ஆக அதிகரிக்கப்படும்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேமிப்பு கணக்குகளை தொடங்க ஏதுவான வட்டி விகிதம், ஏடிஎம் கட்டணம், பணம் எடுக்கும் வரம்பு மற்றும் பலவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளின் பணம் எடுக்கும் வரைமுறை குறித்து கீழே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி:
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு பாஸ்புக் கோடு சேர்ந்து பணம் எடுக்கும் படிவத்தை பயன்படுத்தி வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.25,000 பணத்தை எடுக்கலாம். காசோலையைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.1 லட்சமாகவும், அடுத்தவர்களின் காசோலை மூலம் பணம் எடுக்கும் வரம்பு ரூ.50 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிளாட்டினம், கிளாசிக் மற்றும் தங்கம் போன்ற மூன்று வகையான டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளது. பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள், ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 ஒரு முறை பணம் எடுக்கும் வரம்பு ரூ. 20,000 ஆகும். கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.25,000 ஒரு முறை பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 ஆகும். கோல்ட் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 ஒரு முறை பணம் எடுக்கும் வரம்பு ரூ. 20,000 ஆகும்.
எச்டிஎப்சி வங்கி:
எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் -ல் இருந்து ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.25,000 எடுத்துக் கொள்ளலாம். தங்களது கிளை அல்லாத மற்ற கிளைகளிலில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை இலவசம் ஆகும். அடுத்தவர்களின் காசோலை மூலம் பணம் எடுக்க வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு 50,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி:
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான சொந்த கிளையில் பணம் எடுப்பதற்கான வரம்பு ஒரு மாதத்திற்கு ரூ .1 லட்சம் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.