தமிழகத்தில் இந்த நாட்கள் ரேஷன் கடைகள் கிடையாது – எதற்காக தெரியுமா? முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் இந்த நாட்கள் ரேஷன் கடைகள் கிடையாது - எதற்காக தெரியுமா? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் இந்த நாட்கள் ரேஷன் கடைகள் கிடையாது - எதற்காக தெரியுமா? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் இந்த நாட்கள் ரேஷன் கடைகள் கிடையாது – எதற்காக தெரியுமா? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – CSK அணியை வீழ்த்தி முதல் IPL கோப்பையை வென்ற நாள்!

அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 17%ல் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இதுவரை இது தொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வருகிற ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை நியாயவிலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் வருகிற ஜூன் 10ம் தேதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள பணியாளர்களை திரட்டி முதல்வர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த நாட்களும் ரேஷன் கடை செயல்படாது என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!