FDல் அதிக பலன்களை தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!
நடுத்தர மக்கள் முதல் பொருளாதாரத்தில் செழிப்பாக உள்ளவர்கள் வரை அனைவரும் பயனடையும் விதமாக அஞ்சலகத்தில் பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் எளிய முறையில் அதிக லாபம் அடையும் வகையிலான ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் காண்போம்.
FD திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடுகள் விவரம் – மாநில அரசு வெளியீடு!
அஞ்சலகத்தில் நிலையான வைப்பு நிதி (FD) கணக்கு துவங்குவது மிகவும் எளிமையானது. பயனர்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான முதிர்ச்சியுடன் நிலையான வைப்பு நிதி வசதிகள் உள்ளது. இந்த நிலையான வைப்பு நிதி கணக்கை யார் வேண்டுமானாலும் தனியாகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். தனி கணக்கை எப்போது வேண்டுமாலும், இணைப்பு கணக்காக மாற்றும் வசதியும் உள்ளது.
TN Job “FB Group” Join Now
கணக்கு திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 இருந்து அதிகபட்சம் தொகைக்கான வரம்புகள் ஏதும் இல்லை. 1 முதல் 3 வருட FD கணக்குகளுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. 3 முதல் 5 வருட FD கணக்குகளுக்கு 6.70% வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கவும், எந்த அஞ்சலக அலுவலகம் மூலம் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தவோ அல்லது பணத்தை வெளியே எடுக்கவோ முடியும். ஒருவர் ஐந்து வருட பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் தொகைக்கு மட்டும் வருமான வரிச்சட்டம் 80சி-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
Super