தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் எப்படி புதிய ரேஷன் கார்டிற்கு பதிவு செய்வது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் இல்லாமல் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான முக்கிய தகவல் – நிதியமைச்சு வெளியீடு!
இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் அட்டைதாரர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் கூட ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறலாம். தற்போதெல்லாம் எளிமையாக ரேஷன் கார்டுகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் எப்படி புதிய ரேஷன் கார்டுகளை பெறுவது என்பதை பார்க்கலாம். அதாவது, தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.tnpds.gov.in/ க்கு செல்ல வேண்டும். இணையதள முகவரிக்குள் சென்று பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும்.
Exams Daily Mobile App Download
பின்பு, உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வரும். OTP எண்ணை பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து PDF ஆக சேமித்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த காப்பியை உங்களது பகுதிக்கு அருகில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று அதற்குரிய நகலை சமர்பித்தால் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் 1800 425 5901 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.