ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – கார்டை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா? முழு விவரம்!
ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் கார்டு வழங்கப்படும். ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, பணம் சார்ந்த விஷயங்களுக்கும் அது முக்கியம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு எந்த எந்த இடங்களில் பயன்படுகிறது என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
முழு விவரம்:
இன்றைய நடைமுறை வாழ்க்கையில், ஆதார் கார்டு இல்லாமல் தனிநபரை உறுதி செய்யும் எந்த சேவைகளையும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. அதாவது வங்கி சேவையில் இருந்து சிலிண்டர் வாங்குவது வரையில் அனைத்திற்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது.
சென்னை டூ பெங்களூரு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – முக்கிய மாற்றங்கள்!
பென்சன்: பென்சன் வாங்குவோருக்கு ஏதுவாக ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்பிக்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆயுள் சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களின் தகவல்களைப் பெறுவதால், அவர்களது ஓய்வூதியத்தை நேரடியாக வீட்டிலேயே பெறுவதை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎம் கிசான்: இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. மேலும் பிஎம் கிசான் திட்டத்தில் கீழ் நிதியுதவி பெற ஆதார் கட்டாயம் ஆகும்.
வங்கிக் கடன்: பல்வேறு வகையான அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம். மேலும் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு பான் கார்டு மட்டுமல்லாமல், ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கேட்கப்படுகிறது. ஆதார் அட்டை வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் புகைப்படம் வங்கிகளால் செல்லுபடியாகும் முகவரிச் சான்றாகக் கருதப்படுகிறது.
சிலிண்டர் மானியம்: வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த மானியத் தொகை வெவ்வேறு அளவில் உள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்கு சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைத்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
கல்வி: ஆதார் கார்டு பள்ளி அல்லது கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. இது தவிர பல்வேறு அரசு நிறுவனங்களில் KYC சரிபார்ப்பு மற்றும் சுயவிவர பராமரிப்புக்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.