தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – முழு விபரம் இதோ!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் சில சமயங்களில் தங்களது ஆதார், ரேஷன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தவறுதலாக தொலைத்து விடும் சூழ்நிலைகள் ஏற்படும். அவ்வாறு ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் இந்த ரேஷன் கார்டு இருந்ததால் மட்டுமே சாமானிய மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பொது மக்களுக்கு உதவியாக தமிழக அரசின் சார்பில் இரண்டு முறை ரூபாய் 2000 வழங்க பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசும், தொகையும் வழங்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – மேலும் 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ரேஷன் கார்டு திடீரென தொலைந்து விட்டால் எவ்வாறு அதை மீண்டும் பெறலாம் என்பதை கீழ் வரும் தொகுப்பில் முழுமையாக பார்ப்போம். ரேஷன் கார்டு புதிதாக பெற கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம்.
அதற்கான படிகளாக,
1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வவலைத்தளமான https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. அப்போது, பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும்.
3. அதன் பிறகு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.
4. அதனை தொடர்ந்து, TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள்.
5. கூடுதல் வசதிகளாக பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும். தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம்.
6. மேலும் அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
7. அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.