தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முழு நேரமும் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் முழு நேரமும் செயல்பட வேண்டும். மேலும் அனைத்து பாடவேளைகளிலும் மாணவர்கள் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் சுகாதாரத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசு ஆய்வு!
இந்த நிலையில் நடப்பாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அனைத்து பள்ளிகளும் முழு நேரமும் அதாவது காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாட வேலைகளிலும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் முழு நேரம் பள்ளிகள் செயல்பட வேண்டும். மாணவர்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வரவைத்து பாடம் நடத்த வேண்டும்.அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது போன்றவை நடைபெற கூடாது. அவ்வாறு நடந்தால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.