தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு – XE வகை வைரஸ் தொற்று பரவல் அச்சம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த XE வகை வைரஸ் தொற்று பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
XE வகை வைரஸ்:
தமிழகத்தில் இதுவரை மூன்று கொரோனா அலைகள் பரவி மக்களை பாதிப்பு உள்ளாகி உள்ளது. முதல் அலை கடந்த 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த டெல்டா பிளஸ் வைரஸ் குழந்தைகளையும் பாதிப்புக்குள்ளாக்கியது. அதனை தொடர்ந்து ஓமிக்ரான் தற்போது திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த XE வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் இந்த தொற்று பரவி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!
இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர், இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை BA 2 ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த XE வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் வைரஸ் பரவலால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.