இந்தியாவில் அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பிரதமரின் அறிவிப்புக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. எக்கச்சக்கமான பொது மக்கள் கொரோனா தொற்றினால் பலியாயினர். அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், அவசியமில்லாமல் பொது இடங்களில் நடமாட வேண்டாம் எனவும், மாஸ்க் அணிந்து தான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
ஐடி துறை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 60% வரை சம்பளம் உயர்வு!
அரசின் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், மக்கள் அனைவரும் அரசின் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததால் மக்கள் அனைவருமே தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பழையபடி இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளையும் கொரோனா வார்டுகளாக மாற்றி கொண்டிருக்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் பீதியில் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தலாமா என பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.