முழு ஊரடங்கு உத்தரவில் 2 மணி நேரம் தளர்வுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
சமீபத்தில், மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இன்று இரண்டு மணி நேரம் மட்டும் ஊரடங்குச் சட்டத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் வகுப்புவாத வன்முறை வெடித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் முழுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதாவது, ராம நவமி அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் நடைபெற்ற நிலையில் பரவலான வகுப்புவாத வன்முறைகள் ஏற்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அம்மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், ஓய்வு நேரத்தில் பெண்கள் மட்டுமே வீட்டு உபயோகப் பொருட்களை பெறுவதற்காக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பேருந்து, ரிக்ஷா, டாக்சி டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு – மே 1 முதல் அமல்! அரசு அதிரடி நடவடிக்கை!
இதற்கிடையில் கார்கோனில் தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருப்பதால் இன்று (ஏப்ரல்.14) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அப்பகுதியில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தளர்வின் போது அத்தியாவசியப் பொருட்களை வாங்க பெண்கள் மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக கர்கோன் கலெக்டர் அனுக்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதியான சூழ்நிலையை உறுதிப்படுத்த பல மாநில மற்றும் மத்திய படைகள் இன்னும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 நாட்களுக்கு பின்பாக தளர்வுகளை அளித்தது மக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை உருவாக்கி இருக்கிறது.