மீண்டும் கொரோனா பரவி வருவதால் ஏப்ரல் 12 வரை முழு ஊரடங்கு – பிரதமர் அறிவிப்பு!
கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தீவு நாடான சமோவாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்கனவே ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருந்தது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாயினர். அரசும் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான நடவடிக்கைகளை கையாண்டனர். அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்!
அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு தான் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இனி மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக கொரோனாவே இல்லாமல் இருந்து வந்த தீவு நாடான சமோவாவில் தற்போது கொரோனா பல மடங்காக பெருகி கொண்டிருக்கிறது. இதனால் ஆரம்பத்தில் மூன்று நாட்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!
ஊரடங்கு அறிவித்த பின்பும் கூட கொரோனா பரவி வந்த காரணத்தினால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்திருந்தனர். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வர வேண்டும் என மக்களை பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா எச்சரித்திருந்தார். தற்போதும் கொரோனா கூடுவதும் குறைவதுமாய் இருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் ஊரடங்கை நீடிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.