முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 4 மணி நேரம் தளர்வு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

0
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 4 மணி நேரம் தளர்வு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 4 மணி நேரம் தளர்வு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 4 மணி நேரம் தளர்வு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 2ம் நாளான இன்று சுமார் 4 மணி நேரத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கொலையை அடுத்து அப்பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா இஸ்லாமியர்களின் இறை தூதுவரான நபிகள் நாயகத்தை பற்றி தவறான செய்திகளை கூறியதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நுபுர் ஷர்மாவின் கருத்துக்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்ததுடன் இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்திருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்ற ஒரு சில நாட்கள் கழித்து நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் ஒருவர் சமூக வலைதளங்களில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை கவனித்த இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் சேர்ந்து அந்த டெய்லரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இதை தொடர்ந்து அந்த இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இப்போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவத்தை அடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

மேலும், உதய்பூர் நகரின் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வன்முறை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து இன்று (ஜூலை 2) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்வுகள் அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது, ராஜஸ்தானில் நேற்று (ஜூலை 1) ஜெகன்னாத் ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்களுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால், மாவட்ட நிர்வாகம் இந்த தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!