ஜூலை 9 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசாங்கம் முடிவு!
மாநிலம் முழுவதும் வன்முறை தொடர்பாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபாவில் வரும் ஜூலை மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு உத்தரவு
மலேசியாவின் சபா மாநிலத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கடல் ஊரடங்கு உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சபாவின் கடல் பகுதிகளில் வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறுகையில், சபாவில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு தவாவ், செம்போர்னா, குனாக், கினாபடங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மூன்று கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு?
இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஊரடங்கு காலங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியாட்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்போது கடத்தல் மற்றும் பரிசீலனை குழுக்கள் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தெற்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளால் மலேசியாவின் எல்லைகள் அத்துமீறப்படாமல் இருக்க இந்த ஊரடங்கு உத்தரவு ஜூலை 9ம் தேதி வரை அமலில் இருக்கும். மறுபக்கத்தில் சபாவில் உள்ள தீவுகளுக்கு செல்லும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்