மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!
சமோவாவில் கடந்த 24 மணி நேரத்தில், 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பு பணியாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு :
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அனைத்து நாட்டு அரசுகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் தீவு நாடான சமோவாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமோவாவில் கடந்த 24 மணி நேரத்தில், 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது பாதிப்பால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் நாட்டிற்கு வர அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்