நாட்டில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமரின் அதிரடி முடிவு!
கொரோனாவின் தாக்கம் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நெதர்லாந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் அங்கு ஊரடங்கு அறிவிக்க இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் முடிவு செய்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
நமது நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலித்தொகை 300 ஆக உயர்வு – அரசு அனுமதி!
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அடுத்து வரும் ஒரு ஒரு நாளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அதன்படி, பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயம் இல்லை. விமானங்களிலும், விமான நிலையங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இரவு விடுதிகள் மற்றும் பிற பெரிய அளவிலான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தேவைப்படும் டிஜிட்டல் கோவிட்-19 நுழைவுச்சீட்டு முறையையும் அடுத்த வாரம் முதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெதர்லாந்து நாட்டின் சுகாதார துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும், மேலும் குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவற்றை கடைபிடிக்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்துவது சிரமமாக இருக்கும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளனர்.