தலைநகரில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!

0
தலைநகரில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் - அரசின் அதிரடி உத்தரவு!
தலைநகரில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் - அரசின் அதிரடி உத்தரவு!
தலைநகரில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் பெய்ஜிங்கில் அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கூட கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் பெய்ஜீங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது.

Exams Daily Mobile App Download

சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வருவதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வணிக நகரமான ஷாங்காயில் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் அடி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் வருமான இழப்பு மற்றும் உணவு தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங் நகரில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு அறிவித்த விளக்கம்!

இதற்கிடையே, கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த, பெய்ஜிங் நகர அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பெய்ஜிங் நகரில், கடந்த 28 ஆம் தேதி 49 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய நாள், 50 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெய்ஜிங்கில் வரும் நாட்களில் கொரோனா பரவல் குறைந்தால், அந்த சமயத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!