தலைநகரில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் அதிரடி முடிவு!
தொற்று துவங்கியதிலிருந்து சீனா தனது அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கையை தற்போது பதிவு செய்துள்ளது. சீனாவின் தலைநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, பொது மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனனர்.
அதிரடி முடிவு:
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. இந்த வைரசின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, மற்ற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டன. சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெரிய நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைஅடுத்து இந்தியாவிலும், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சீன அரசு, பூஜ்ஜிய கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில், சுமார் 2.1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அந்த நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.
மே 2 வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து – முதன்மை செயலர் அறிவிப்பு!
இந்நிலையில் பீஜிங் நகரில், வெறும் 40 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் நகரம் முழுவதும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என மொத்தம் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில், தொற்றாளர்களை தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற குழப்பத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இருப்பினும் முழு ஊரடங்கு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு தீவிரப்டுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.