தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – 6 முக்கிய அறிவிப்புகள்!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் - 6 முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் - 6 முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – 6 முக்கிய அறிவிப்புகள்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூடுதல் தளர்வுகளை அறிவித்து ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அது இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் மக்கள் கவனத்தில் கொள்ள முக்கிய 6 அறிவிப்புகளை காணலாம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வராத காரணத்தினால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஜூன் 14) முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெகுவாக பாதிப்புகள் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் இன்று முதல் திறப்பு – தலைமை ஆசிரியர்களுக்கான செயல்முறைகள்!

மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து கொரோனா சங்கிலியை உடைக்க துணையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இதை அடுத்து தமிழகத்தில் விதிக்கப்பட்ட தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய 6 அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மக்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறைந்த தளர்வுகள் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் டாஸ்மாக் கடைகளில் 6 அடி சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதற்காக வகுக்கப்பட்ட14 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அழகு நிலையம், சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் டீ கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பினால் பூங்கா, விளையாட்டு திடலில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளை மேற்கொள்ள இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பங்கள் கொடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!