தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்பானது 35 ஆயிரத்தில் இருந்து, தற்போது 15 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளித்து வருகிறது.
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு? மாநில அரசின் நடவடிக்கைகள்!!
இந்த பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கில் சலூன் கடைகள், தேநீர் கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளின் போது பொது மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பொது மக்களின் நலன் கருதி கொரோனா பரவல் குறையும் வரையும் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதாவது வெளிநாட்டு பயணிகளை பரிசோதித்து, அவர்களை தனிமைப்படுத்த கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சரியும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.