தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு வரும் ஜூன் 7 ஆம் தேதியுடன் முடிவடைவதால், கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக மே 10 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது, மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் தளர்வில்லா பொது முடக்கமானது ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவலானது, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கையானது தற்போது வெகுவாக குறைந்து, ஒரு நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தமிழகத்திலும் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பானது சற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் (Twitter) பயனர்களுக்கு செம அறிவிப்பு – ப்ளூ டிக் மீண்டும் அறிமுகம்!
மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொரோனா மூன்றாம் அலைக்கான அச்சம் இருப்பதால், அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தவிர முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.